English
மதுரை மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய மேயர் நியமனத்தை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதால், மதுரை திமுகவினர் விரக்தியடைந்துள்ளனர். மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் பொன் வசந்த் சிறைக்கு சென்றதால் மேயராக இருந்த இந்திராணியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி, மேயர் பதவியை கட்சித்தலைமை பறித்தது. அவருக்கு பதிலாக புதிய மேயரை தேர்வு செய்வதற்கு திமுகவினர் இடையே ஒற்றுமையில்லாததால் புதிய மேயரை கட்சித்தலைமையால் உடனடியாக தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால், புதிய மேயர் தேர்வை, திமுக தலைமை 3 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சித்தலைமையின் இந்த முடிவுக்கு கவுன்சிலர்கள் மத்தியில் ஆதரவும், அதிருப்தியும் கலந்து வெளிப்பட்டுள்ளது.
Tamil
தள்ளிப்போகும் மதுரை புதிய மேயர் நியமனம் – திமுக உட்கட்சி பூசலால் முதல்வர் முடிவு
மதுரை மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய மேயர் நியமனத்தை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதால், மதுரை திமுகவினர் விரக்தியடைந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் பொன் வசந்த் சிறைக்கு சென்றதால் மேயராக இருந்த இந்திராணியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி, மேயர் பதவியை கட்சித்தலைமை பறித்தது. அவருக்கு பதிலாக புதிய மேயரை தேர்வு செய்வதற்கு திமுகவினர் இடையே ஒற்றுமையில்லாததால் புதிய மேயரை கட்சித்தலைமையால் உடனடியாக தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால், புதிய மேயர் தேர்வை, திமுக தலைமை 3 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சித்தலைமையின் இந்த முடிவுக்கு கவுன்சிலர்கள் மத்தியில் ஆதரவும், அதிருப்தியும் கலந்து வெளிப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.