சென்னை: “தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்வதுதான் முதல்வர் முக ஸ்டாலின் செய்த சாதனை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில்தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது. இதற்கான காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்,
Click the link above to read the full article on the original website.