English
புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்தது. அதையடுத்து அந்த பகுதியில் அந்த காரை ஒட்டியிருந்த இருசக்கர வாகனங்கள் உட்பட சுமார் 7-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீ பற்றியது. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அதில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே உயிரிழந்தனர்.
3 பேர் தீவிரமாக காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து கிடைத்துள்ள வீடியோ காட்சிகளில் வாகனங்கள் தீப்பற்றி உருக்குலைந்து உள்ளன. இந்தக் காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. அந்தப் பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.
Tamil
டெல்லி வெடிப்புச் சம்பவம்: நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்தது. அதையடுத்து அந்த பகுதியில் அந்த காரை ஒட்டியிருந்த இருசக்கர வாகனங்கள் உட்பட சுமார் 7-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீ பற்றியது. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அதில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே உயிரிழந்தனர். 3 பேர் தீவிரமாக காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து கிடைத்துள்ள வீடியோ காட்சிகளில் வாகனங்கள் தீப்பற்றி உருக்குலைந்து உள்ளன. இந்தக் காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. அந்தப் பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.
Click the link above to read the full article on the original website.