புதுடெல்லி: வெடிபொருள் வாங்க 4 மருத்துவர்கள் இணைந்து ரூ.26 லட்சம் நிதி திரட்டி உள்ளனர் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் குண்டு வெடித்த காரில் இருந்தவர் காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் அகமது நபி என்றும் அவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியிருப்பதும் முதல்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் வெடிபொருளை சேகரித்தது தொடர்பாக தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தற்கொலைப் படை தீவிரவாதியான மருத்துவர் உமர் அகமது நபி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களான மருத்துவர்கள் முஜம்மில் ஷகீல், ஆதில், ஷாகின் ஆகியோர் இணைந்து வெடிபொருள் வாங்க ரூ.26 லட்சத்தை திரட்டி உள்ளனர்.
Click the link above to read the full article on the original website.