புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனை நடத்தியது.
பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகளாக மாறிய மருத்துவர்கள் குறித்து முக்கிய விசாரணைகள் நடைபெறுகின்றன. குண்டுவெடிப்புக்கு முன்பாக பரிதாபாத்தில் கைதான 3 மருத்துவர்கள் உட்பட 8 பேரிடம் விசாரணை தொடர்கிறது. இவர்களில் டாக்டர் முஜாம்மில் ஷகீலின் வாடகை வீட்டில் கைப்பற்றப்பட்ட சுமார் 3,000 கிலோ வெடி பொருட்கள் உட்பட அனைத்து ஆதாரங்களும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை வாங்கப்பட்ட இடமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.