சென்னை: சென்னை பெரியமேட்டில் ரூ.3.86 கோடியில் சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம், ரூ.5.24 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நூலகம், முதல்வர் படைப்பகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை – எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு சேவைகள் வழங்கி வரும் பெரியமேடு சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு ரூ.3.86 கோடி செலவில் 6,200 சதுர அடி நிலப்பரப்பில் தரை மற்றும் 2 தளங்களுடன், பல்வேறு வசதிகளுடன் பெரியமேடு சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.
Click the link above to read the full article on the original website.