ராமநாதபுரம்: தாய்லாந்தில் நடைபெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025' போட்டியில் பங்கேற்ற முதுகுளத்தூர் விவசாயி மகள் கலாச்சார தூதராக தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதிமலர் (28). இவர் பி.டெக். முடித்துவிட்டு பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், மாடலிங்கும் செய்து வருகிறார்.
அண்மையில் புனேயில் நடந்த `மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025' போட்டியில் ஜோதிமலர் வென்றார். இதையடுத்து, கடந்த 8-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025' அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் ஜோதிமலர் பங்கேற்றார்.
Click the link above to read the full article on the original website.