புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் மொத்தம் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள். இதில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் வசமுள்ள முன்னாள் அமைச்சரின் தொகுதி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு குறிவைத்திருக்கிறது பாஜக. காரைக்கால் பிராந்தியத்தில் காரைக்கால் தெற்கு, வடக்கு, திருநள்ளாறு, நெடுங்காடு (தனி), நிரவி-திருப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இவற்றில் தற்போது காரைக்கால் தெற்கும், நிரவி-திருப்பட்டினமும் திமுக வசம் உள்ளன. காரைக்கால் வடக்கு, நெடுங்காடு தொகுதிகள் என்.ஆர்.காங்கிரஸ் வசமும், திருநள்ளாறு தொகுதி சுயேச்சை வசமும் உள்ளன.
இதில், நிரவி-திருப்பட்டினம், திருநள்ளாறு தொகுதிகளில் கடந்த முறை பாஜக போட்டியிட்டு தோற்றுப் போனது. இருப்பினும் இம்முறையும் அந்தத் தொகுதிகளை தனது லிஸ்ட்டில் வைத்திருக்கிறது. திருநள்ளாறில் போட்டியிட்டு தோல்வியடைந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனுக்கு மேலிட செல்வாக்கால் இப்போது நியமன எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில், இம்முறை மீண்டும் இவர் திருநள்ளாறை குறிவைத்து களப்பணிகளை செய்து வருகிறார். அதேசமயம் இம்முறை காரைக்காலில் கூடுதலாக ஒரு தொகுதிக்கும் பிராக்கெட் போடுகிறது பாஜக.
Click the link above to read the full article on the original website.