English
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: கடந்த 2025-26-ம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2 ஆயிரம் தம்பதிகளுக்கு கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்'' என அறிவிக்கப்பட்டது.
Tamil
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயதான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி தொடங்கி வைக்கிறார்
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: கடந்த 2025-26-ம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2 ஆயிரம் தம்பதிகளுக்கு கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்'' என அறிவிக்கப்பட்டது.
Click the link above to read the full article on the original website.